Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தந்திர போராட்ட வீரர்களை கொண்டாடி வருகிறோம்: பா.ஜ., தலைவர் அண்ணாமலை

ஆகஸ்டு 21, 2022 10:47

சென்னை : 'சுதந்திர போராட்ட வீரர்களை கட்சி பேதம், இனம், மொழி, மதம் பேதங்களை பாராமல் உள்ளன்போடு உற்சாகமாக கொண்டாடி வருகிறோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவரது அறிக்கை: பூலித்தேவனின் போர்ப்படை தளபதியாக, நெல்கட்டும்செவல் பகுதியில் மல்லுக்கட்டிய மாவீரன் ஒண்டிவீரன். ஒற்றையாய் ஆங்கிலேயரை சிதற அடித்த காரணத்தால், ஒண்டி வீரன் என்று புகழ்பெற்றவர். தன் கையை தானே வெட்டி, நாட்டுக்கு காணிக்கையாக தந்த தலைசிறந்த தேசபக்தர். மன்னருக்கும், அவர் பின் வந்த மரபினருக்கும் வெற்றிகளை மட்டும் ஈட்டி தந்த வீர திருமகனாக விளங்கிய பெருமகனுக்கு, அஞ்சல்தலை வெளியிட்டு, ஆராதனை செய்கிறது மத்திய அரசு.

தமிழக பா.ஜ.,வின் வேண்டுகோளை ஏற்று, மத்திய இணை அமைச்சர் முருகனின் சீரிய முயற்சியில், நெல்லையில் ஒண்டிவீரனுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. பா.ஜ., சுதந்திர போராட்ட வீரர்களை கட்சி பேதம் பாராமல், இனம், மொழி, மதம் பேதங்களை பாராமல் உள்ளன்போடு உற்சாகமாக கொண்டாடி வருகிறது. நெல்லையின் காவல் தெய்வமாக திகழ்ந்த ஒண்டி வீரனை, பா.ஜ., சார்பில் வணங்கி போற்றி மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்